9 கருத்துரைகள்
  1. உங்கள் வீட்டு ஜன்னலுக்குள்ளால் ஒரு புயல்காட்சியை முழுமையாகப் பார்த்து விட்டேன் நிலா.அத்தனை தத்ரூபமான காட்சி விபரிப்பு! அப்பப்பா!

    மனித வலுவை விட வலிமை வாய்ந்தது இயற்கை என்பதை அது ஆக்கிரோஷமாகச் சொல்லிச் சென்றிருக்கிறது போலும்!

    நீங்கள் எல்லோரும் பத்திரம் என்பது மிக்க ஆறுதல்.காலம் தாண்டிப் போனாலும் என்ன மகனாருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    மிக்க ஆறுதலும் நன்றியும் நிலா.

    ReplyDelete
  2. தானேயின் கோரத் தாண்டவத்தை தங்கள் பதிவின் மூலம்
    தெளிவாக அறியவும் மனச் சங்கடத்துடன் உணரவும் முடிந்தது
    இயற்கை முரண்படில் மனிதன் என்னதான் செய்ய இயலும்
    யோசிக்கச் செய்து போகும் பதிவு
    விரிவான பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  3. புயல் அடித்து ஓய்ந்த மாதிரி இருக்கிறது பதிவு. மொழியை வியப்பதா.. அல்லது இழப்பில் துக்கிப்பதா.. புரியவில்லை.
    இதுவும் கடந்து போகும்.. என்றே ஆறுதல் தேடச் சொல்கிறது மனசு. இயற்கைக்கு முன் மனிதர் வெறும் தூசி.. அது மட்டும் இப்போது எதிரொலிக்கிறது உள்ளுக்குள்.

    ReplyDelete
  4. நன்கு எழுதப்பட்ட பதிவு.
    வேதனையாக இருக்கிறது.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    மீண்டு வர பிரார்த்திக்கிறோம்.
    நன்றி.

    ReplyDelete
  5. புயற்காற்றுடன், மழைத்தூறலுடன், பயத்துடன் தவிக்கும் தவிட்டுக்குருவியுடன் பரிதவிப்புடன் நானும் பயணம் செய்து களைத்துப்போனது மாதிரி இருக்கிறது!

    ReplyDelete
  6. துக்கத்தையும் தூய தமிழின் அழகு மாறாது வெளிப்படுத்திய விதத்தைப் பாராட்டுகிறேன். சேதம் கணக்கிலடங்காது போனாலும் அதையும் மன உறுதிகொண்டு மீண்டு வரும் மனித உள்ளங்களுக்கு மகத்தான பாராட்டுகள். இங்கே இந்தப் பதிவில் தாய்மையின் தவிப்பு, உபகாரகுணம், மாமனாரின் மீதான மரியாதைக்கான சான்றுகள், பறவைகள் மீதான பாசம், அடுப்படி ராஜ்ஜியத்தின் மீதான அலுப்பு, சக மனிதர்களின் செயல்பாடுகளை நேர்த்தியாய் விமர்சிக்கும் பாங்கு, நண்பர்கள் மேல்வைத்த நேச உணர்வு, ஊழிக்காற்றையும் வாழ்க்கையையும் ஒப்பிட்ட விதம், இப்படி நுண்ணிய மன உணர்வுகளின் வெளிப்பாடாய் அமைந்த அத்தனையும் உங்கள் இடத்திலிருந்து எம்மைப் பார்க்கவும் உணரவும் வைத்தன.

    அழிவிலிருந்து மீண்ட மனம் அதிர்விலிருந்தும் மீள பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  7. புயலின் வீச்சை மீண்டும் புரிந்து கொண்டோம். நி.த. நடராஜ தீக்ஷிதர், நெய்வேலி http://natarajadeekshidhar.blogspot.com

    ReplyDelete
  8. புயல் அடித்து ஓய்ந்து விட்டது... அதன் வடுவைச் சுமந்தபடி இன்னும் நெய்வேலி மக்கள்.... பதிவிலேயே நம் மக்களின் நிலை புரிகிறது....

    ReplyDelete
  9. மனம் நொந்த நிகழ்வுகளையும் தீந்தமிழில் பகிர்ந்த அழகைப் பாராட்டியே ஆகவேண்டும். பாராட்டுக்கள் நிலாமகள். அழிவிலிருந்து மீண்ட மனம் அதிர்விலிருந்தும் மீள பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete